அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.
இன்றைய அஸ்ஸாம் எம்.எல்.ஏக்களில் ஒருவர் பெண்.
கணவர் இருக்க இன்னொருவரைத் திருமணம் செய்து கொண்டு அந்த நபருடன் காதல் வாழ்வை ஏற்படுத்திக் கொண்டவர்.
அவரும் அவருடைய புதிய முக நூல் காதலரும் ஒருவருக்கொருவர் அன்பு கலந்து இந்த நிலையை எய்திட முகநூல் நட்புப் பாலம் (?) அமைத்துத் தந்துள்ளது.
இந்தப் பெண் எம்.எல்.ஏ.வின் நடத்தையில் சினமுற்றவர்கள் நேற்று (30.6.2012) அந்த எம்.எல்.ஏ.வும் அவருக்கு இரண்டாவது கணவராகப் பதவி ஏற்றுக் கொண்டவரும் Chatting செய்து கொண்டிருந்த ஓட்டல் அறையில் புகுந்து, அவர்கள் இருவரையும் அடித்து உதைத்துத் துவம்சம் செய்திருக்கிறார்கள். இதை எல்லோரும் தொலைக்காட்சி செய்திகள் வாயிலாகப் பார்த்தோம் இன்று.
பொதுமக்கள் ‘தங்கள் தொகுதிச் சட்ட மன்ற உறுப்பினரின் ஒழுக்கம் கெட்ட செயலுக்கு வழங்கிய தீர்ப்பு இது’வெனத்தான் நாம் கருத முடிகிறது.
சட்டம் இருக்கத் தண்டனையை, சட்டத்துக்கு அப்பால் தர முனைவது சட்டப் படி தவறுதான்.
ஆனால் அந்த சட்டத்தை இயற்றும் இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஒழுக்கக்கேடான நடத்தைக்கு அடிக்கோல் நாட்டி, முன் நின்று செயல் படும் எம்.எல்.ஏவை இதுவரை அந்த சட்டம் என்ன செய்து கொண்டிருந்தது?
அந்தப் பெண் எம்.எல்.ஏ சார்ந்துள்ள ஆளும் கட்சியும் அவர்களுடைய சட்டம்,நீதி அதிகாரமும் அந்த எம்.எல்.ஏவுக்குப் பாதுகாப்பு அல்லவா கொடுத்து வந்திருக்கிறது?
அடிபட்ட பின் மீட்கப் பட்ட அப் பெண் எம்.எல்.ஏ. ‘இது தன் தனிப்பட்ட விஷயம்’ என்றும் ‘அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை’என்றும் பேட்டி கொடுக்கின்றார்.
மக்கள் பிரதி நிதியான அவர்,முதலில் செய்திருக்க வேண்டியது விவாக ரத்து;பிறகு சட்டப்படியான இரண்டாவது திருமணம்.
அதைவிட அவர் செய்திருக்க வேண்டியது ‘சொந்தக் காரணத்தைச் சொல்லி ‘எம்.எல்.ஏ.பதவி விலகல்’.
ஆனால்,மக்கள் பிரதிநிதி என்ற அந்தஸ்தில் இருந்து கொண்டு அவர் செய்த கேடு கெட்ட செயலுக்கு அதே சட்டம் வேடிக்கை பார்த்ததே தவிர வேறு என்ன செய்தது?
ஓட்டுப் போட்ட மக்கள் இதை அனுமதிக்கவில்லை என்பதும் அவர்களின் உண்மையான பிரதிநிதிகள் அதற்கு உரிய எதிர்ப்பைச் சரியாகக் காட்டியிருக்கிறார்கள் என்றுதான்எடுத்துக் கொள்ள வேண்டும்.
சட்டம் தன் கடமையை நேர்மையுடன் செய்யாவிட்டால் அதை மக்கள் சக்தி திரண்டு செய்யும் என்பது இப்போது அடி எடுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
வன்முறை தண்டனைக்குரியதுதான்.
அதைவிட வன்முறையைச் செய்வதற்குத் தூண்டும் செயல்கள் சட்டத்துக்கு அப்பாலும் தண்டனைக்குரியது..
‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்பது தேர்தலுக்கு மட்டுமட்டல்ல;தேர்தலுக்குப் பிறகு,தேர்ந்தெடுக்கப்படுகின்ற மக்கள் பிரதிநிதிகளுக்கும்தான்.
அரச நீதியை விட ஆண்டவன் நீதி தப்புவதில்லை.
இவண்,
கிருஷ்ணன்பாலா
1.7.2012
வணக்கம்.
இன்றைய அஸ்ஸாம் எம்.எல்.ஏக்களில் ஒருவர் பெண்.
கணவர் இருக்க இன்னொருவரைத் திருமணம் செய்து கொண்டு அந்த நபருடன் காதல் வாழ்வை ஏற்படுத்திக் கொண்டவர்.
அவரும் அவருடைய புதிய முக நூல் காதலரும் ஒருவருக்கொருவர் அன்பு கலந்து இந்த நிலையை எய்திட முகநூல் நட்புப் பாலம் (?) அமைத்துத் தந்துள்ளது.
இந்தப் பெண் எம்.எல்.ஏ.வின் நடத்தையில் சினமுற்றவர்கள் நேற்று (30.6.2012) அந்த எம்.எல்.ஏ.வும் அவருக்கு இரண்டாவது கணவராகப் பதவி ஏற்றுக் கொண்டவரும் Chatting செய்து கொண்டிருந்த ஓட்டல் அறையில் புகுந்து, அவர்கள் இருவரையும் அடித்து உதைத்துத் துவம்சம் செய்திருக்கிறார்கள். இதை எல்லோரும் தொலைக்காட்சி செய்திகள் வாயிலாகப் பார்த்தோம் இன்று.
பொதுமக்கள் ‘தங்கள் தொகுதிச் சட்ட மன்ற உறுப்பினரின் ஒழுக்கம் கெட்ட செயலுக்கு வழங்கிய தீர்ப்பு இது’வெனத்தான் நாம் கருத முடிகிறது.
சட்டம் இருக்கத் தண்டனையை, சட்டத்துக்கு அப்பால் தர முனைவது சட்டப் படி தவறுதான்.
ஆனால் அந்த சட்டத்தை இயற்றும் இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஒழுக்கக்கேடான நடத்தைக்கு அடிக்கோல் நாட்டி, முன் நின்று செயல் படும் எம்.எல்.ஏவை இதுவரை அந்த சட்டம் என்ன செய்து கொண்டிருந்தது?
அந்தப் பெண் எம்.எல்.ஏ சார்ந்துள்ள ஆளும் கட்சியும் அவர்களுடைய சட்டம்,நீதி அதிகாரமும் அந்த எம்.எல்.ஏவுக்குப் பாதுகாப்பு அல்லவா கொடுத்து வந்திருக்கிறது?
அடிபட்ட பின் மீட்கப் பட்ட அப் பெண் எம்.எல்.ஏ. ‘இது தன் தனிப்பட்ட விஷயம்’ என்றும் ‘அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை’என்றும் பேட்டி கொடுக்கின்றார்.
மக்கள் பிரதி நிதியான அவர்,முதலில் செய்திருக்க வேண்டியது விவாக ரத்து;பிறகு சட்டப்படியான இரண்டாவது திருமணம்.
அதைவிட அவர் செய்திருக்க வேண்டியது ‘சொந்தக் காரணத்தைச் சொல்லி ‘எம்.எல்.ஏ.பதவி விலகல்’.
ஆனால்,மக்கள் பிரதிநிதி என்ற அந்தஸ்தில் இருந்து கொண்டு அவர் செய்த கேடு கெட்ட செயலுக்கு அதே சட்டம் வேடிக்கை பார்த்ததே தவிர வேறு என்ன செய்தது?
ஓட்டுப் போட்ட மக்கள் இதை அனுமதிக்கவில்லை என்பதும் அவர்களின் உண்மையான பிரதிநிதிகள் அதற்கு உரிய எதிர்ப்பைச் சரியாகக் காட்டியிருக்கிறார்கள் என்றுதான்எடுத்துக் கொள்ள வேண்டும்.
சட்டம் தன் கடமையை நேர்மையுடன் செய்யாவிட்டால் அதை மக்கள் சக்தி திரண்டு செய்யும் என்பது இப்போது அடி எடுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
வன்முறை தண்டனைக்குரியதுதான்.
அதைவிட வன்முறையைச் செய்வதற்குத் தூண்டும் செயல்கள் சட்டத்துக்கு அப்பாலும் தண்டனைக்குரியது..
‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்பது தேர்தலுக்கு மட்டுமட்டல்ல;தேர்தலுக்குப் பிறகு,தேர்ந்தெடுக்கப்படுகின்ற மக்கள் பிரதிநிதிகளுக்கும்தான்.
அரச நீதியை விட ஆண்டவன் நீதி தப்புவதில்லை.
இவண்,
கிருஷ்ணன்பாலா
1.7.2012
No comments:
Post a Comment