Thursday, July 5, 2012

நித்தி:சிரிப்பதற்கல்ல; சிந்திப்பதற்கு.






நண்பர்களே,
வணக்கம்.

World record of tamil people  என்று ஒரு Page முகநூலில்.
அதில் நித்தியின் போலிக் காவி வேடம் பற்றி ஓர் நையாண்டிப் பதிவு.
கற்பனைதான் எனினும் உண்மையை உரித்துக் காட்டும் நையாண்டிக்
கருத்துப்  பதிவு.

நான் நித்தியைப் பற்றி  ஆரம்பம் முதலே கடும் சாடல்களுடன்
இங்கே எனது பதிவுகளை உங்கள் முன் வைத்தவன் என்பதால்,

இந்த நையாண்டிப் பதிவு எனது கூரான எழுத்துக்களின் தாக்கத்தைப் பிரதிபலிக்கின்றவகையில் இருந்ததுஅதை வெகுவாக ரசித்தேன்.ரசித்ததோடு அப்படியே உங்கள் சிந்தனைக்கும்
வைக்கின்றேன்.

இது சிரிப்பதற்கல்லசிந்திப்பதற்கு.
நன்றி..
இவண்,
கிருஷ்ணன்பாலா
5.7.2012

 -----------------------------------------------------------------------

பராசக்தி – பாணியில் ஓர் நையாண்டி 
இது சிரிப்பதற்கல்லசிந்திப்பதற்கு.

நித்தியின் வாக்குமூலம்
(இது ஒரு கற்பனைதான்;ஆனாலும் சிந்திக்க).
-------------------------------------------------------------------------------

நான் சரண் அடைந்து மதிக்கும் கனம் கோர்ட்டார் அவர்களே,

இந்த நீதிமன்றம்… விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது..

புதுமையான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது..

ஆனால்இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானதல்ல

வழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன் அல்ல..

வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாக ஏமாற்றிப்
பிழைக்கும் சாமியார்களில் நானும் ஒருவன்..

சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்..

கதவைத்திற காற்று வரட்டும் ’ என்றேன்..

நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படிக் கூறினேன்..

குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன்.....

இப்படியெல்லாம்..
நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப்
போகின்றேன் ’ என்று
இல்லை ; நிச்சயமாக இல்லை

சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்.. ஏன்???

மக்களை ஏமாற்றவேண்டும் என்பதற்காகவாஇல்லை..

மக்களிடம் காணப்படும் மூடநம்பிக்கை வளரவேண்டும் என்பதற்காக..

கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்.. ஏன்..??’

காற்று வரவேண்டுமென்பதற்காகவாஇல்லை..

அந்த நடிகை ஈசியாக ரூமுக்குள் வரவேண்டும்’ என்பதற்காக

நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்.. ஏன்???


எனக்கு கால் வலி என்பதனாலேயா?….இல்லை
அவள் நான் ஒரிஜினல் சாமியார் என்று என்மீது வைத்திருக்கும் 
அபரிமிதமான நம்பிக்கையை நீக்குவதற்காக….

'உனக்கேன் இவ்வளவு அக்கறை?, உலகத்தில் யாருக்கும்
இல்லாத அக்கறை?' என்று நீங்கள் கேட்பீர்கள்..

நானே பாதிக்கப்பட்டேன்நேரடியாகப் பாதிக்கப்பட்டேன்,

எனது சுயநலத்திலே பொது நலமும் கலந்து இருக்கிறது,

என்னைக் குற்றவாளி என்கிறீர்களேஎன் வாழ்க்கை பாதையைச்
சற்று திரும்பி ப் பார்த்தீர்களானால் அது உங்களுக்குப் புரியும்.

நான் வாங்கிய அடிகள் எத்தனைமிதிகள் எத்தனை,

உதைகள் எத்தனை என்று கணக்குப் பார்க்க இயலும்

நான் பாடசாலைக்குக் கூடப் போனதில்லை ஆனால் ஆன்மீகப்
புத்தகங்கள் படித்திருக்கிறேன்..

நான் நல்ல சன்னியாசியாக இருந்ததில்லை ஆனால் ஊருக்கு
உபதேசம் செய்திருக்கிறேன்..

கேளுங்கள் என் கதையைஎன்னை அடித்துத்  துவைப்பதற்கு முன்
தயவு செய்து கேளுங்கள்..

இந்தியாவிலே தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான்பிறக்க ஒரு ஊர் ;
பிழைக்க ஒரு ஊர்,

போலிச்சாமியார்களின் தலை எழுத்துக்கு நான் மட்டும்
என்ன விதி விலக்கா???

தமிழ்நாட்டில்  பிறந்த நான்ஜோசியம் பார்க்க ஜோதிடரிடம்
ஓடோடி வந்தேன்,

ஜாதகம் என்னை நீயொரு மதபோதகன் என்றது

என் பெயரோ நித்தியானந்தா,

கேட்டாலே உதைக்கத்  தோன்றும் பெயர்.

ஆனால் என் போதனைக்கு அடிமையாகாத
ஏமாளிகளே கிடையாது

நான் மட்டும் நினைத்து இருந்தால் சாமியாராக வராமல்
இருந்திருக்கலாம்,

ஏதாவது ஒரு மட்டமான படத்தில் சாமியாராக நடித்திருக்கலாம்,

கஞ்சா பிசினஸ்கழவெடுத்தல் என்று காலத்தை ஓட்டி
இருக்கலாம்.
ஆனால் அதைத்தான் விரும்புகிறதா இந்தப் பரந்த உலகம்?

நடிகையின் மேட்டரில் படத்தைப் போட்டு எரித்தார்கள்….
ஓடினேன்

மக்களின் காசில் கட்டிய மடத்தை சுக்குநூறாக உடைத்தார்கள்…....
ஓடினேன்
நேற்று வந்த சின்னப் பொடியன் என் ஜல்சா வீடியோவை
யூ டியூப்பில் போட்டான்……

ஓடினேன்....ஓடினேன்... ஓடினேன்….
கேரளாவுக்கு ஓடினேன்
கர்னாடகாவுக்கு ஓடினேன்
பெங்களூருக்கும் ஓடினேன்...

ஓடினேன் ஓடினேன்…… இந்தியாவின் அனைத்து
ஊர்களுக்கும் ஓடினேன்

எனது பக்தர்களின் கொலைவெறித்தாக்குதல் தாங்காமல்
திரும்பி வந்து விட்டேன்.

என் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும்,

வீடியோவை யூ டியூப்பில் போக்கி இருக்க வேண்டும்,

என்னை தப்பியோட கதவைத் திறந்துவிட்டிருக்க வேண்டும்

இன்று என் முன் சட்டத்தை நீட்டுவோர்.

செய்தார்களாதப்பியோட விட்டார்களா

இந்த நித்தியானந்தாவைஎன்னை , சாமி என்று நம்பி
ஏமாந்தது யார் குற்றம்??

எனது குற்றமா?  என்னை நம்பி ஏமாந்த மூடர்களின் குற்றமா?

நான் சொன்னதை நம்பி க் கதவைத்திறந்து வைத்தது
யார் குற்றம்? ’கதவைத்திற காற்றுவரட்டும் ’
என்று சொன்ன எனது குற்றமா?

கேனத்தனமாக என் பேச்சை நம்பிக்கதவைத் திறந்த மூடர்களின் குற்றமா?

எனது காலைப்பிடித்து விட்டது யார் குற்றம்?,

காலைப்பிடித்துவிடும்படி கூறிய எனது குற்றமா?

இல்லை மாத்திரை தந்துவிட்டு காலைப்பிடித்து
விட்ட நடிகையின் குற்றமா??

இந்த குற்றங்கள் எல்லாம் களையப்படும் வரையில்,
என்னைப் போன்ற நித்தியானந்தாக்கள்ஏமாற்றும்
போலிகளாகத்தான் உருவாகிக் கொண்டிருப்பார்கள்.
-----------------------------------------------------------------------------------

Courtesy: World record of tamil people மற்றும் இதை மறு பதிவு செய்ய
உதவிய திரு சிவக்குமார் வெள்ளியங்கிரி. (முகநூல் நண்பர்)

No comments: