Sunday, August 17, 2014

கைலாஷ் நாதரின் கைலசாத் தோற்றம்!

அன்பிற்குரிய நண்பர்களே,
வணக்கம்.
உலக அதிசயங்களில்  ஒப்பற்ற தெய்வீகத் திருக்காட்சியாக, உலகம் யாவையும் தாமுளவாக்கி,இந்தப்பிரபஞ்சம் முழுதும் தன்னை வியாபித்துக் கொண்டு ஆனந்த தரிசனம் தந்து கொண்டிருக்கும் திருப்பதியாகத் திகழும் இமாலயத்தின் கைலாசத்தைக் கண்டு இன்புறும் பேறு நம்முள் எத்தனை பேருக்குக் கிடைத்திருக்கும்? கிடைக்கும்?

நமது ரிஷிகளும் முனிகளும் மாமன்னர்களும்  தரிசித்துப் பேறு பெற்ற அந்தக் கைலாசத்தைக் காண நமக்குப் பணம் இருந்தால் மட்டும் போதாது;பாக்கியமும் இருக்க வேண்டும்.

ஈசனின் கருணையும் நாம் செய்த புண்ணியங்களின் பலனும் கை கூடி  இருந்தால் ஒழிய அவன் குடி கொண்டிருக்கும் திருவிடத்தைத் தேடிச் சென்று தெய்வீகக் காட்சியாகக் காணும் பேறு நமக்குக் கிடைக்கவே கிடைக்காது.

அப்படியெல்லாம் இல்லாமல் இந்தப் புகைப்படங்களின் மூலம் அந்தக் கைலாஷ்பதி குடி கொண்டிருக்கும் அருள் தோற்றத்தை கூகுள் சாட்டிலைட் சானல் மூலம் Vidya Subramaniam  என்கிற திருமதி உஷா (Facebook நண்பர்அவர்கள் தரிசித்திருக்கிறார்.

தான் பெற்ற இன்பத்தை இவ்வுலகெல்லாம் பெற்று நெகிழ வேண்டும் என்பதற்காக கூகுள் மூலம் தான் மட்டுமே பெற்ற கைலாஷ் நாதரின் தோற்றத்தை புகைப்படமாக முகநூலில் ஆன்மீக விருந்து படைத்துள்ளார்.

நம்புவோர் நம்புங்கள்.;

மயன் என்னும் தேவசிற்பி செதுக்கிய முகம்போல் கைலாச முகடுகளுக்கு நடுவே ஓர் முகடை சிவபெருமானின் திருமுகமாக வடித்ததுபோல் தோன்றும் கைலாஷ் பதியின் காட்சி, நம்புவோரை மெய்சிலிர்க்க வைக்கும்.

அந்த அனுபவம் எனக்கு ஏற்பட்டது.

உங்களுக்கு?

பார்த்து விட்டு எனக்கு எழுதுங்கள். உங்கள் வார்த்தைகளை அரிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் இருக்கிறது.உங்கள் கருத்துக்களை அவருக்கு முகநூல் மூலமே  அனுப்புவுவேன்.

படங்களுடன் திருமதி உஷா சுப்பிரமணீயம் அவர்கள் ( முகநூலில்: Vidya Subramaniam)  எழுதிய குறிப்பு இது:

// Google Earth ல் தினமுமே ஒரு முறை கயிலாயத்தை சுற்றி சுற்றி வந்து பார்த்து சிலிர்ப்பது என் வழக்கம். இன்று அவ்வாறு செய்த போது இதுவரை காணாத அதிசயம் ஒன்று திடுமென என் முன் தெரிந்தது. கயிலையின் மேற்கு முகத்தில் சிவனின் முகம் மிக அழகாகத் தெரிந்தது. புருவம், கண்கள் , புன்னகைக்கும் அதரங்கள் ஜாடாமுடி, தோள்கள் என கம்பீரமான சிவனின் தோற்றம் தெரிந்ததும் அதிர்ந்து போனேன் ஒரு வினாடி. என் தேகம் சிலிர்த்தது. இக்காட்சி இதுவரை நான் காணாதது. மிக வித்தியாசமாகத் தெரிந்த இந்த அபூர்வ கட்சியை நீங்களும் காணவேண்டும்  என விரும்புகிறேன்.

யாம் பெற்ற இன்பம் பெறு இவ்வையகம்.

-Vidya Subramaniam @ Facebook on 16.8.2014 //

அன்புடன்,
கிருஷ்ணன்பாலா                                                             









  

No comments: