நண்பர்களே,
அனைவருக்கும் 2013ன் புத்தாண்டு வணக்கமும்
வாழ்த்துக்களும்.
தமஸோம ஜ்யோதிர் கமய;
ம்ருத்யோர்ம அம்ருதம் கமய...”
என்று உலகின் நன்மைக்காகப்
ப்ரார்த்திக்கிறது
ரிக் வேதம்.
”பொய்யிலிருந்து
உண்மைக்கும்
இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கும்
அழிவிலிருந்து அழியாத நிலைக்கும்
எங்களை வழி நடத்திச் செல்வாயாக!”
என்று-
செழுஞ்சுடராம் சூரியனை நோக்கி நம்
முன்னோர் வேண்டிக் கொள்ளும் வழிபாடு இது.
சூரியனே உலகின் கண்கண்ட கடவுள் என்று
ரிக் வேதம் சொல்கிறது.
நம் அறிவுக்கு மெய்ஞ்ஞான வித்து சூரியன்தான் என்பதைக் கண்டுணர்ந்த உண்மை இது.
மத உணர்வுகளை எல்லாம் கடந்து, உள்முகம்
கொண்டு உணர்ந்தால் இந்த உண்மையை எவரும்
மறுக்க முடியாது.
உலகின் மிகத் தொன்மை வாய்ந்த
வேதம் என, கற்றாய்ந்த அறிஞர்களாலும்
மானுடவியலாளர்களாலும் போற்றப்படும் ரிக் வேதத்தில் சொல்லப்பட்ட
இவ்வாசகம் மிக நுட்பமான மெய்ஞ்ஞானச்
சிந்தனைக்கு நம்மை வழிநடத்தக் கூடியதாகும்.
உலகின் கண்கண்ட முழுமுதல் கடவுள்
என சூரியனை நோக்கி வணங்கி
வேண்டுவதுபோல் இந்த வழிபாடு காட்டும்
உணர்வினை நாம் சிந்தையில் கொண்டு
இந்த நாளில் நம் எல்லோருக்குமாக வேண்டுவோம்:
பொய்ம்மையிலிருந்து
மெய்ம்மைக்கு;
இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு;
அச்சத்திலிருந்து துணிச்சலுக்கு;
சுயநலத்திலிருந்து
பொது நன்மைக்கு....
நம் அனைவரையும் இப் புத்தாண்டு (2013) வழி
நடத்திச் செல்லுமாக!
இவண்-
கிருஷ்ணன்பாலா
1.1.2013
No comments:
Post a Comment