Monday, February 13, 2012

கலாச்சாரக் கொலைத் தினம்!

அறிவார்ந்த நண்பரகளே,

வணக்கம்.

எனக்குத் தெரியும்:

நிர்வாண தேசத்தில் கோவணம் அணிந்தவன் பைத்தியக்காரன் என்பதும் செவிடர்களின் சபையில் பேசுபவன் ஊமை என்பதும்!

இதோ, நான் கோவணம் அணிந்து கொண்டு  பேசுகிறேன்

தங்கள் எதிர்காலக் குழந்தைகள் தங்கள் கட்டுப்பாட்டில் வளரத்
தேவையில்லை’ என்றும் ‘அவர்கள் மிருகங்களைப் போல்
எதிர்காலத்தில் எக்கேடு கெட்டேனும் போகட்டும்என்றும் எண்ணிக் கொண்டு இன்று பருவக் காதலில் பட்டுப்போய், பெற்றவர்களைக் கண்ணீர் சிந்த வைத்து, கனவுக் கற்பனைகளில் சிறகடித்துக் கொள்கிறவர்களுக்குச் சிலிர்ப்பூட்டும் தினம்தான்இந்தவாலண்டைன்ஸ்’  டே

அறிவையும் அனுபவத்தையும் ஒன்றாக்கிச் சிந்திப்போர்க்கு இது, உண்மையான காதலின் பெருமையைச் சிறுமைப்படுத்தும் நாள்;
பக்குவமற்ற இரு’பாலர்’கள் தங்களின் எதிர்காலத்துக்குக் குழியைப்
பறித்துக் கொண்டு குதூகலிக்கும் நாள்.

வாலண்டைன்’ஸ் டே’ என்று அதை வெகுவாகச் சிலாகித்துக் கொண்டு சிறகடிக்கின்ற பேர்வழிகளை வாழ்த்திகபோதித்தானமாகக் கருத்து விடுதிகளைப்போலீஸ் நிலையம் போல்நடத்தும்  பேர்வழிகளை என்ன சொல்ல?

தந்தையர் தினம்என்றும்தாயைப் போற்றும் தினம்என்றும்
தமிழர் பண்பாட்டுத் தினம்என்றும் கொண்டாட வேண்டிய தமிழன்,
நமது பண்பாட்டைச் சீரழிக்கும் அனாசாரத்துக்குஆலோலம்பாடத் தொடங்கி அதில் ஆரவாரம் செய்யத் தொடங்கி விட்டான்.

’எதையும் பேசலாம்;எதையும் பரப்பலாம்’ என்பதற்கு வலை விரிக்கும் வலைத்தளங்களில் அவன் சிலந்தியின் வலையில் சிக்கிச் சீரழியப்போகும் ஈக்களைப்போல் ஈன ஸ்வரம் பாடுவதில் இன்பம் காண்கின்ற இழிபிறவியின் இனத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கின்றானே?.

தனது பண்பாட்டுப் பெருமைகளின் சவ ஊர்வலத்துக்கு இதன் மூலம் பாடை தூக்குவதில் பரவசம் கொள்கின்றவனாகி விட்டானே என்ற நமது கவலையை இங்கே தெரிவித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் நமக்கேற்பட்டு விட்டது.

காதல் ஜோடிகளை சேர்த்து வைத்து ஃபாதர் வாலண்டைன் இறந்துவிட்ட நாளைத்தான்காதலர் தினமாகக் கொண்டாடுவதாக  காதல் கிறுக்கன் எவனோ ஒருவன் கட்டி விட்ட கதை, இன்று மூடர்களின் வேதமாகி,கலாச்சாரப் படுகொலை நாளாகி விட்டது.

இந்தப் பைத்தியக்காரத்தனத்தை உண்மைத் தமிழர்கள் கண்டிக்க வேண்டாமா?
கடவுளுக்கு வழிகாட்ட வேண்டிய பாதிரியார்,கண்ணறாவிக் கஷ்டத்துக்கல்லவா வழி காட்டியிருக்கிறார்?

அது சரி, காதலர்களைச் சேர்த்து வைத்துத்தான் அவர் இறந்தாரா? சேர்த்து வைத்த பாவத்துக்காக இறந்தாரா?

இதை ஆராய்ச்சி செய்து யாராவது சொன்னால் நல்லது.

இவண்-
கிருஷ்ணன்பாலா
14.2.2012


No comments: