Friday, February 24, 2012

கூடன்குளம் அணுமின் உற்பத்திக்கு எதிர்ப்பு-தேசத்துரோகத் தூண்டல் (பகுதி-1)

மேய்ப்பவர்களுக்கே விளங்கா
விஷயம்;செம்மறி ஆடுகளுக்கு விளங்கி  விடாது  நண்பர்களே!

ஆம்!

‘கூடங்குளம் அணு மின் உற்பத்தி’  எதிர்ப்பில் இறங்கி இன்று  வழிதெரியாமல் விழி பிதுங்கிக் கொண்டிருக்கும் ஆட்டு மந்தைகளாகிவிட்ட மக்களைப் பற்றித்தான்  நாம்இன்று கவலைப்படவேண்டியுள்ளது

கூடன் குளம் அணுமின் உற்பத்திக்கு எதிர்ப்பு’ என்பது ’தேசத் துரோகச்  செயல்பாடுகளின் கடைந்தெடுத்த குற்ற நடத்தை’  என்பதை முதலில் இங்கு நாம் எச்சரித்துநம் கருத்தை  வைக்க வேண்டியிருக்கிறது.

இன்று நமது மாநில அரசுக்குப் பெரும் பிரச்சினையாக இருப்பது : மின் பற்றாக் குறை.

இதன் விளைவுகளின் கொடிய பாதிப்புக்கள் வசதிமிக்க தலை நகரில் வாழுகின்றவர்களுக்கு  இன்னும் வந்து சேரவில்லை.ஏன்,
ஆட்சியாளர்களுக்கே  கூட உரிய பாதிப்பை  இன்னும் அது தந்துவிடவில்லை.

வரும்;வந்த பின்  நொந்து பயனில்லை;
தரும்தந்த பின்  தலை நிமிர்ந்து பார்த்துப் பயனில்லை!

இந்தப் போராட்டத்தை இந்த அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கிபோலிப் போராட்டக்காரர்களைத் தோலுரித்துக் காட்ட வேண்டும்
என்பதே தேசத்தின் வளர்ச்சியையும் அறிவியலின் ஆக்கத்தையும் புரிந்து கொண்டவர்களின் ஒட்டுமொத்தக் கோரிக்கை.

இதை ஆதரிப்போருக்கு எனது வணக்கமும் வாழ்த்துக்களும் உரியது;
ஆதரிக்காதோருக்குநமது ஒட்டு மொத்த அனுதாபங்கள்

நண்பர்களே,

ஏறத்தாழ ரூபாய்  12000 கோடிகளைச் செலவிட்டு நமது மத்திய அரசு
உருவாக்கிய ‘கூடங்குளம்  அணுமின் உற்பத்தி மையம்செயல் படத்
தொடங்கும் வேளையில்,தமிழ் நாட்டின் 40 சதவீத மின் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய அணுமின் நிலைய உற்பத்தித் தொடக்கத்தை
உதயகுமார் முதலான திடீர்ச் சமூகச் சேவகர்கள்’ முளைத்து,
முடக்கி இருக்கிறார்கள்.


அதாவதுஇந்தத் தேசத்தின் பொருளாதாரக் கட்டமைப்பின் மீது
‘ஜனநாயக உரிமைஎன்கிற கவசத்தை அணிந்து கொண்டு 'மக்களுக்கான போராட்டம்’ என்று ஒரு புரட்டுத் தத்துவத்தைக்
கையில் எடுத்துக்கொண்டு மிகமோசமான அதர்ம யுத்தத்தைச்
சொந்த மண்ணில்,சொந்த மக்கள் மீதே திணித்துள்ளார்கள்.


இந்தப்  படுபாதகத்தை ‘வெகுஜன எழுச்சி’ என்று காட்டிக் கொண்டு
ஆபத்து வரும் காலத்தில் அதே பொது ஜனத்தையே பலிகடா ஆக்கித் தாங்கள்  தப்பித்துக் கொள்ளும் தந்திரோபாயம்தான் இந்த ‘மக்கள்
போராட்டமே’ தவிர,உண்மையில் மக்களைக் காக்கின்ற சமூக
நோக்கம் இவர்களுக்கு இல்லை;இவர்கள் உண்மையான 
சமூகச் சேவகர்களும் இல்லை;இவர்கள் தேசத் துரோகிகள்.


உலகச் சந்தையில் இரண்டு பெரும்வல்லரசுகளின் அறிவியல்
தொழில் நுட்ப வியாபாரப் போட்டியினால் பின்னடைவாகிவிட்ட
ஒரு பெரிய வல்லரசு நாட்டின் வஞ்சக வலையில் சிக்கி,
அவர்களின் பின்பலத்தால் கூட்டம் சேர்த்து,'வியாபாரத்தில் வென்ற
நாட்டின் மதிப்பையும் அதனோடு ஒப்பந்தம் செய்து கொண்டநமது
நாட்டின் வளர்ச்சியையும் சீர்குலைப்பது ஒன்றே நோக்கம்’
எனச் செயல்படும் சிறு மதியாளர்கள்.

தாங்கள்  ஏற்றுக் கொண்ட பாத்திரத்தை கச்சிதமாய்  நடத்தி முடிக்க
இவர்கள் எடுத்துக் கொண்ட கருவிதான்’ மக்கள் போராட்டம்
என்னும் மௌடீகசாதனம்.

இப்பகுதிவாழ் மக்களின்  உயிருக்கு ஆபத்து’  என்ற புரளியைக்
கிளப்பி விட்டு, தங்கள் நோக்கத்தில் இவர்கள் பூதாகர வளர்ச்சியை
அடைந்து விட்டார்கள் தாடிகளை வளர்த்து சே கு வாராக்கள்
போல் இவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளத்தலைப்பட்டு,
ஒன்றும் அறியாத அப்பாவி மக்களின் கூட்டத்தில் ‘மக்கள் புரட்சியின் நாயகர்களாக இப்போது உளறிக் கொண்டு உலாவந்து
கொண்டிருக்கின்றார்கள்.

விஞ்ஞானத்தின் வியத்தகு சாதனைகளைக் கொண்டு வெகுவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்ற உலகில்,இவர்களின் வளர்ச்சியைக் கண்டு நாம் தலை குனிந்து வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நண்பர்களே,

அறிவியலின் பயன்பாட்டை அனுபவிக்காதவர்கள் என்று உலகில்
யாருமே இன்று இருக்க முடியாது.வெளி உலகிற்குத் தட்டுப்படாத
ஆதிவாசிகள் உட்பட.

அறிவியலின் மேம்பட்ட பரிணாமம்தான் அணு சக்தி.

அந்த‘அணுசக்தியை,மனிதகுலத்தின் ஒட்டுமொத்த அழிவுக்கும்
பயன்படுத்த முடியும்வசதிமிக்க வாழ்வுக்கும் பயன்படுத்த முடியும்
என்பதுதான் இன்றைய அணுசக்திப் பயன்பாட்டுத் திறனில்
மனிதன் அடைந்துள்ள முன்னேற்றம்.

முதல் உலக மகாயுத்தத்தின்போது அமெரிக்கா அணுசக்தியினால்
தயாரிக்கப் பட்ட அணு குண்டுகளை முதன் முதலாக ஜப்பான் மீது
போட்டபோதுதான் அணுவின் பேரழிவுத் தன்மை பற்றிய பேரச்சமும்
விழிப்புணர்வும் உலக மக்களிடையே தோன்றியது.

ஹிரோஷிமா-நாகசாகியின்(ஜப்பான்) பேரழிவுப் பெரும் கொடுமை
கண்டு உலகமே கண்ணீர் சிந்தியது; அணு குண்டு வீசிய அமெரிக்கா
உட்பட.

இதன்  எதிரொலியாக, அணு ஆராய்ச்சிப் பரவலுக்கே உலக
நாடுகளிடையே  கடும் எதிர்ப்பும் அதை ஒழிப்பதற்குரிய பிரச்சாரமும்
எல்லாத் திசைகளிலும் எழுந்ததுஆனால்அணுவியலாளர்களின்
கருத்தோ நேர் எதிர்த் திசையில் சென்றுஅணுவை ஆக்கச் 
சக்திக்கும் பயன்படுத்த முடியும்’ என்ற  உண்மையைப் பல்வேறு 
ஆழ்ந்த,நுட்பமான ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபித்துக் காட்டினர்.

அதன் விளைவுதான்இந்தப் பிரபஞ்சத்தில் பூமிப்பந்துக்கும் அப்பால்
பலகோடி மைல்கள் இடைவெளியில் சுழன்று கொண்டிருக்கும்
மற்ற கிரகங்கள் பற்றிய ஆராய்ச்சியில் அறிவியலாளர்கள்
நுழைந்தது.

விண்வெளி ஆராய்ச்சி என்பதும் அதில் பெரும் பங்கு வகிக்கும்
அணு சக்தியின் பயன்பாடுகள் எந்த அளவுக்கு மனித குலத்துக்குப்
பயன்தரும்என்பதும்தான் அறிவியல் தொழில் நுட்பங்களில்  
முன்னேறிய நாடுகளின் வியத்தகு பரிணாம வளர்ச்சி.

அந்த வகையில் இந்தியா, அணுசக்திப் பயன்பாட்டுத் துறையில்
மற்றெந்த நாடுகளுக்கும் சளைத்ததுமல்லஇளைத்ததும் அல்ல
என்பதை நிரூபித்துக் காட்டி அணு சக்தியை மக்களின் ஆக்கச்
சக்திக்கு மட்டுமே பயன் படுத்துவதுஎன்ற சுய சார்பு உறுதி
மொழியைஉலக நாடுகளின் முன் வைத்துப் பிற நாடுகளைப் 
பிரமிக்க வைத்திருக்கிறது.


தைச் சாதித்துக் காட்டுகின்ற திட்டத்தின் ஒரு பகுதிதான்
அணு சக்தி மூலம் மின் உற்பத்தியைச் செய்வதுஎன்பது.

நண்பர்களே,

இதை எதிர்ப்பது எத்தகைய பத்தாம் பசலித் தனமான அறிவு?
என்பதும் அது தேசத் துரோகத்தின் கடைந்தெடுத்த குற்றச்
செயல்களின் அங்கம் என்பதும் உண்மையிலேயே கல்வி 
அறிவு பெற்றிராத மக்களுக்குத் தெரியாதுதான்.

ஆனால், ’அமெரிக்காவில் படித்து விட்டு வந்திருக்கின்றேன் பேர்வழி
என்று சொல்லிக் கொண்டு ஒரு சிலர்அணு மின் உற்பத்திஎன்பது
மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிப்பது’ என்று பாமர மக்களுக்கு அச்சமூட்டும்  வதந்தியைக்  கிளப்பிவிட்டு, அவர்களை ஒன்று திரட்டி,
சொந்தத் தேசத்தின் மீதே போர்தொடுப்பது போலத் தாயார்ப் படுத்தி,
ஒட்டு மொத்த தேசத்தின் நலனுக்கான திட்டத்தை அமலாக்கப் படுத்துவதைக் கெடுக்கவும் தடுக்கவும் முயல்கின்ற செயல் தேச விரோதச்செயலே அன்றி வேறென்னவாக இருக்க முடியும்?


அறிவியல் தொழில் நுட்பப் பாதுகாப்பு உறுதி செய்யப் பட்ட
’கூடன்குளம்  அணுமின் உற்பத்தி’ மையத்தின் கட்டமைப்பு பற்றிய 
ஒரு மூடத் தனமான அச்சத்தை மக்களிடையே பரப்பி, “மக்களே
உங்கள்  உயிருக்குஆபத்துஉங்களைக் காக்கக் கூடிய ரட்சகர்கள் 
நாங்கள்தான்”  என்று சுயதம்பட்டம் அடித்துக் கொண்டு ‘அணுமின்
திறன்  என்றால்  என்ன?’ என்பதே  தெரியாத அந்தப் பாமர 
மக்களிடையே உயிர்பற்றிய அச்சத்தைப் பரப்பி இருப்பதானது
நிச்சயம்  தேசத் துரோகத்  தூண்டலின்  ஒரு பகுதிதான்.

அதன் மூலம் ‘மக்கள் போராட்டம்’ என்பதாக ஒரு போலி நாடகத்தை
நடத்திக் கொண்டு தேச விரோதச் செயலில் ஈடுபட்டு அரசியல்
பூச்சாண்டி காட்டியிருக்கிறார்கள், இந்தப் போலி மேய்ப்பர்கள்.

கூட்டத்தைப் பார்த்தாலே ‘குஷியாகிப் போகின்றன் நம் சில்லறை
அரசியல்வாதிகள் சிலருக்கு, இதுஅல்வா’ போல் ஆகிவிட்டது.
விடுவார்களா? அவர்களும் இதை அரசியலாக்கிக் கொண்டு உளறத்
தொடங்கி விட்டார்கள்.

இப்பகுதி முன்னேற்றம் அடைந்து விட்டால், ‘நம் வியாபாரம்
எடுபடாமல் போய் விடும்’ என்று சிலபணமுதலைகள்கூட
இவர்களின் போராட்டக் கூத்துக்கு நிதி உதவி வழங்கி, இந்தப் 
பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு எதிராகத் திரை
மறைவில் நின்று செயல்படுவதாகச் சில செய்திகளும் இப்போது
வெளிவரத் தொடங்கியுள்ளது.

ஆனால்இதையும் கடந்த சில சிந்தனைகளை நாம் இங்கு
சற்று எதிர்கொண்டால் ‘கூடன்குளம் அணுமின் உற்பத்திச்
செயல்பாட்டுக்கு எந்த மாதிரியான பெரும் சக்தி,இதன்
பின்புலத்தில்  நிற்கிறது?’என்பது விளங்கும்அது நம்மை
அதிரவும் வைக்கும்.....
                                                                  
                                                                       ( அடுத்த பகுதி 2ல் சந்திப்போம்)

2 comments:

V.Rajalakshmi said...

1.போராட்டம் செய்து திராவிடர்களாகவே இருக்க விரும்பும் திறைமைசாலிகள்
அணுகதிர்கள் பரவாமல் பாதுகாப்பாக செய்யும் திறமை வெளிநாட்டவரை விட நாம் அறிவாளிகள்தான், இதை உணர்ந்தும் போராட்டம் என்ற பெயரில் செய்யும் நாடகங்கள், அப்படி பார்க்க போனால் அணுசக்தி என்ற பெயரில் எந்த வித Power plant உம் நம் நாட்டில் இருக்க கூடாதே!ஓடுகிற நீரில் கைகழுவும் பேர்வழிகள் இந்த போராளிகள்

2.இது மின்சார உற்பத்தி பற்றியது மின்சாரம் வீணாவதை பற்றிய சில விஷயங்களில் இதுவும் ஒன்று :-
விவசாயத்திற்கு என கொடுக்கப்படும் இலவச மின்சாரம் கட்டுபடுத்த வேண்டும், கிராமத்தில் வாழும் மக்கள் தன் வீட்டு சமையலுக்கும் அந்த மின்சாரத்தை அதிகம் பயன்படுத்துகிறார்கள் நகரத்தை விட மின்சார அடுப்பு கிராமங்களில் பயன்படுத்துகிறார்கள் ஏன்? இலவச மின்சாரத்தால் தானே?

Siva's said...

அணுகுண்டு செய்வாங்களா நண்பரே ?