Saturday, January 14, 2012

கவி‘தை’ வாழ்த்து!













புதியதை,இனியதைத் தருவ ‘தை’
பூமியில் யாவரும் பெறுவதை
எதிர்வரும் நாள்முதல் காண்பதை
இறையதைவணங்கியே வாழ்த்திதை
‘தைஇதன் வருகையில்வரைகிறேன்;
தமிழரின் தனிப் பெரும் நாளிதை
தரணியில் போற்றுவோம் நண்பரே,
அமிழ்தினும் இனியநம் நட்பிலே
அனைவரும் மகிழ்வ ‘தை’ விரும்புவோம்!

நட்புடன்
கிருஷ்ணன்பாலா
14.1.2011

2 comments:

V.Rajalakshmi said...

பொங்கிய'தை'!
உங்கள் செந்தமிழ் அமு'தை'
பு'தை'யல் போன்ற கவி'தை'யில்
படித்து சிந்'தை'யிலும்
'தை' பொங்கல் பொங்கியது

V.Rajalakshmi said...

பெரும் பொங்கல் வாழ்த்திய'தை
ரசித்து இச்சிறு பொங்கலும் பொங்கிய'தை'சொல்லும் வார்த்'தை'
"உங்கள் செந்தமிழ் அமு'தை'
பு'தை'யல் போன்ற கவி'தை'யில்
படித்து சிந்'தை'யிலும்
இத்'தை' பொங்கல் பொங்கியது!"