Sunday, May 15, 2011

நட்புடனும் நியாயத்துடனும் (எழுதுகிறேன் - தொடர்:6)

 அன்புக்கும் நட்புக்கும் இனிய நண்பர்களே,

வணக்கம்.

’நட்புடனும் நடு நிலையுடனும்’ என்று நடந்து முடிந்த தேர்தல் குறித்தான கருத்துப் படைப்பை இங்கே 14.5.2011 அன்று பதிவு செய்து நண்பர்களுக்கும் அனுப்பியிருந்தேன். அதைப் படித்துத் தங்களுடைய எண்ணங்களையும் பிரதிபலித்து நண்பர்கள் பலரும் எனக்கு எழுதியுள்ளனர்.அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் உரித்தாகின்றன.

இதில், திருமதி கல்யாணி ரகுராம் ”இதற்கு மாற்று வழி என்ன சொல்லுங்கள்? யார் அந்த அறிவுள்ள தலைவன்?” என்று கேள்வி எழுப்பிருந்தார்.’இந்தக் கேள்வி தனி ஒருவரின் உணர்வன்று; நாடு பற்றியும் நல்ல மாற்றங்கள் தேவை என்பது பற்றியும் சிந்திப்பவர்களின் கேள்வி’ என்பதால் இதற்கு எனது எண்ணங்களையும் பதிலாகச் சொல்வது தேவையாகின்றது.

ஆரோக்கியமான அரசியலுக்கும் அறநெறி ஆட்சிக்குமான வழிமுறைகள் என்ன என்பதை அறிவுடையோர் யாவரும் சிந்திக்க வேண்டியிருக்கிறது;அது ஒவ்வொருவரின் கடமையும்கூட.

எனவே, தேர்தல் பற்றிய விசாரத்தைத் தொடங்கிய.நான்,அதற்கான வழிமுறைகளையும் எனது கருத்தாகச் சொல்லியாக வேண்டும் அல்லவா?

இதோ,எனது சிந்தனைகளைத் தொகுத்து இங்கே சுருக்கமாக உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.இதைத் தீட்டுவதும் திட்டுவதும் அறிவார்ந்த நண்பர்களாகிய உங்கள் பொறுப்பு.

‘அரசியலில் அறிவுள்ள தலைவன் கிடைப்பதற்கு முன், நாட்டில் ஏற்படுத்தப் படவேண்டிய அரசியல் அமைப்பு மாற்றங்கள் இவையாக இருப்பின் அந்த அறிவுள்ள தலைவன் யார் வேண்டுமானலும் இருக்கலாம்’ என்பதே என் துணிபான எண்ணம்.
எனது கருத்துக்களின் சுருக்கமான தொகுப்பு இதுதான்:

1.முதலில் 49 ஓ’வை ஆதரிப்பது.

2. அப்பழுக்கற்ற .உயர் நீதிமன்ற-உச்ச நீதி மன்ற நீதிபதிகளின் (ஓய்வு பெற்றவர்கள்) குழுவின் கீழ் தேர்தலுக்கு நிற்போரின் தகுதிகளை ஆய்வு செய்து,தகுதி பெற்றவர்களை மட்டும் தேர்தலில் அனுமதிப்பது.

3.தேர்தலில் நிற்பதற்கென்ற தகுதிகளை முன்னதாகவே தேர்தல் கமிஷன் கண்டறிந்து கொள்ளவும்,இதற்காக, தேர்தலில் நிற்க விரும்புவோருக்கென்று ஓர் தனித் தேர்வாணையம் உருவாக்கி அதன் மூலம், நடத்தப்படும் தேர்வுகளில் பங்கு கொண்டு நாடு,மக்கள்,அரசியல் சாசனம்,சட்டமன்ற நடைமுறைகள் இவை பற்றிய ஞானமும் அறிவும் உள்ளவர்கள்’என்ற சான்றிதழ்கள் பெற்றவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் என்ற அடிப்படைத் தேர்தல் விதிகளை ஏற்படுத்த வேண்டும்.

4.தேசம்,மக்கள் பணி,தனி மனிதர்களின் கடமையுணர்வு,கட்டுபாடான நேர்மை இவை பற்றிய அடிப்படை அறிவுத் தேர்வில் ‘தேர்வுச் சான்றிதழ்கள்’ பெற்றவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க் முடியும் என்ற ஒரு சட்ட விதியை ஏற்படுத்தி,அத்தகைய அடிப்படைச் சான்றிதழ்கள் பெற்றவர்களை மட்டுமே தேர்தலில் நிற்க அனுமதிக்க வேண்டும். தேர்தலுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்;தேர்தலில் வென்றவர்களுக்கான ஊதியம் தவிர அவர்கள் வேறு ஒன்றையும் சம்பாதிக்க முடியாதவர்களாகவும் அவர்களுக்குக் கிடைக்கும் ஓய்வூதியத்தின் மூலம் மட்டுமே வாழ்நாள் முழுதும் வாழும் உத்திரவாதம் அளிக்கப் பட்டவர்களாகவும் தேர்தல் விதி முறைகள் கொண்டு வரப்படுதல். அதிகாரத்தில் இருக்கும் அவர்களைக் கடும் சட்டவிதிகள் மூலம் கண்காணிக்கவும் அதையும் மீறி .ஊழல் குற்றச் சாட்டுக்அலுக்கு ஆளானால் உடனுக்குடன் விசாரித்துத் தாமதமின்றித் தீர்ப்பளித்துத் தண்டனை வழங்கவும் உரிய சட்டங்கள் தேவை.

5.யாராயினும் குற்றச் சாட்டு நிருப்பிக்கப் பட்டால் அவர்களை நிரந்தரமாகவே அரசியலில் இருந்து நீக்கி,அவர்கள் சொத்துக்கள் முழுவதையும் அரசே கைக் கொண்டு இறுதி வரையில் அவர்கள் அரசு விடுதியிலேயே வாழும்படியும் அரசு தரும் உணவு,மருந்து இவற்றை மட்டுமே ஏற்றுக் கொள்ளவுமான கடும் சட்ட அமுலாக்கத்தைக் கொணர்வது;

6.ஊழல் செய்தவர்களை எக்காலத்திலும் தேர்தலில் நிற்கவோ,முறைமுகமாகக் கூட அதிகாரத்தில் பங்கு கொள்ளவோ சட்ட ரீதியாகத் தடை விதிப்பது; ஊழல் பேர்வழிகளின் நடத்தை நிரூபிக்கப் பட்டால் அவர்களுடைய சமுதாய ரீதியிலான உரிமைகள் அத்தனையையும் பறித்து, அவர்களை அரசின் பராமரிப்பின் கீழ் கொணர்வது (இதில் அரசு அதிகரிகளும் அடக்கம்)

7.ஜாதிகளுக்கு ஏற்ப வழங்கப் பட்டு வரும் சலுகைகளை நிறுத்திக் கொள்வதுடன் ,ஜாதிகளின் பேரில் எந்த இயக்கத்தையும் நடத்த அனுமதி மறுப்பது;மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் முன்னுரிமை மட்டுமல்ல;கால வரம்பையும் நிர்ணயிப்பது

8.தனி மனிதனின் வருமானத்தில் உச்ச வரம்பைக் கொணர்வது.

9.அரசுக் கருவூலத்தைக் கொண்டு,இலவசங்கள் வாரி வழங்கி,தன் கட்சி,தன் குடும்பம்,தன் கூட்டம் இவற்றை வளர்த்துக் கொள்வதும், ,இதை ‘தான்’ செய்ததாகச் சுய தம்பட்டம் அடித்து அதன் மூலம் ஓட்டு வங்கியைப் பெருக்கிக் கொள்வதுமான அயோகியத்தனமான அரசியல் கேடுகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பது.

10.குறுகிய காலத்தில் மிகப் பெரும் வளர்ச்சி அடையும் நிறுவனக்களையும் தனி மனிதர்களையும் மக்கள் மன்றம் முன்பு நிறுத்தி,தங்கள் வளர்ச்சிக்குரிய காரண காரியங்களை சட்ட ரீதியாக நிரூபிப்பதற்கான நீதி அமுலாக்கம்.

11. மக்களுக்குச் சேவை செய்யப் புறப்பட்டு விட்டதாகச் சொல்லி அரசியலில் கொள்ளையடிப்பதையும் அதிகார சுகங்களில் திளைக்கவும் திட்டமிட்டுச் செயல்படும் Extra Authority என்று சொல்லத்தக்கவர்களை வைத்துக் கொள்வதைக் கண்காணித்து மறைமுக அதிகார மையங்கள் செயல் படுவதைக் கடுமையாகத் தண்டிப்பது.

12.ஆட்சி நடத்தும் எவருமே தன்னை எஜமானர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பாங்கைக் கடுமையாகத் தண்டிக்கும் சட்ட விதிகளைக் கொணர்ந்து,அவற்றை அமுல் படுத்தும் மக்கள் மன்றக் குழுக்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகளின் கண்காணிப்பு கூழுக்கள் முதலானவற்றை சட்ட ரீதியாகச் செயல் பட அனுமதிப்பது

13.’ அரசியலில் அதிகாரம் பெற்றவர்கள் எஜமானர்கள் அல்ல;அவர்கள் மக்களின் சேவகர்கள்’ என்கிற உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் ஆட்சி நிர்வாகம் நடத்தும் கடுமையான சட்டங்களைக் கொணர்தல்.

14.பதவிப் பித்தில் அலையும் சமூக விரோதிகள் தாமகாவே தேர்தலில் நிற்க அஞ்சும் வகையில், உண்மையிலேயே ஒழுக்கமும் அறநெறிச் சிந்தனையும் மிகுந்தவர்கள் தேர்தலில் நிற்கவும் ஒரு சல்லிக்காசுகூட செலவு செய்யாமல் மக்கள் அவர்களைத் தேர்ந்து எடுக்கவுமான நடைமுறைகளைக் கொணர்தல்.

15.கல்வியை எங்கும் எதிலும் இலவசமாகச் செய்தல்.

16.ஒவ்வொருவருக்கும் வேலை வாய்ப்பை உறுதி செய்தல்.

17.முதியோர்களின் அமைதியான ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் செய்யும் அரசு நிர்வாகம்.

18..அனைவருக்கும் அரசு நடத்தும் இடுகாடும் சுடுகாடுமே கடைசிப் புகலிடம் என்பதைச் சட்டமாக்குவது

இவைபோன்ற சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட புதிய சித்தாந்த அரசியல் அணுகு முறைகளைச் சிந்திக்க மக்களைத் தூண்டுவோம்.

“நமக்குத் தொழில் கவிதை;நல்லவே எண்ணல்;நாட்டுக்கு உழைத்தல்;
இமைப் பொழுதும் சோராதிருத்தல்”

–இங்கே பாரதி சொன்னதையும் பகிர்ந்து கொள்கிறேன்:நண்பர்களே,நன்றி.

நட்புடனும் நியாயத்துடனும்-
கிருஷ்ணன் பாலா
15.5.2011

1 comment:

aadhava prakas said...

1 ."சைவமும் தமிழும், சமணர்களை கழுவில் ஏற்றி அடக்கியதாக தகவல்களை கேள்விப்பட்டிருக்கிறேன்....... அது போல பல நூறு ஆண்டுகளாக இந்த பாரத தேசத்தில் இருந்து வரும் முகமதியர்களையும், கிறிஸ்துவர்களையும் அடக்கி ஆளாமல் விட்டு வைத்திருப்பது ஏன்?"
2 . "கிறிஸ்துவர்களையும் முகமதியர்களையும் அடக்குவதற்கு அவசியம் இல்லாமல் போய்விட்டதா?"
3 . அந்நிய மதத்தினரின் ஊடுருவல் காலத்தின் கட்டாயமா?

(எனக்கு பிற மதத்தின் மீது வெறுப்பு இருப்பதாக நினைக்க வேண்டாம், இந்த கேள்விகள் எனக்குள் நீண்ட நாட்களாகவே தோன்றிக்கொண்டிருந்தது....... இந்த கேள்வியை நான் உங்களிடம் கேட்பதற்கு ஒரு காரணமும் இருக்கிறது......... தங்களின் "திடமான ஜோதிடம்" பகுதியை நான் படித்தேன், அதில், எந்த ஒரு விசயத்தையும் வரலாற்றுப்பூர்வமாகவும், தெளிவான கண்ணோட்டத்துடனும் அணுகும் தங்களின் பாங்கு எனக்கு பிடித்திருந்தது........ எனவே தான் உங்களிடம் இந்த கேள்வியை கேட்டால் நல்ல பதில் கிடைக்கும் என்று எண்ணினேன் )