உருமாற்றிய தேசம்;
இன்று-
கலக்கத்தின் கரங்களில்
கரைந்து நிற்கின்றது!
கக்கிடும் அலைகளின்
கொடுமைப் பெயரைக்
குறித்த நாடு;
இன்று-
அதே-
கடல் அரக்கனின்
'சுனாமி’க்கரங்களில்
சிக்கி-
சின்னா பின்னபட்டு
விக்கித்து நிற்கிறது!
விரைவில்
அத் தேசம்
துன்பத்திலிருந்து
விடியலைப் பெறவும்;
அமைதியில் சூழ்ந்து
ஆறுதல் பெறவும்;
இழந்த உயிர்கள்
இறையடி நிழலில்
இரண்டறக் கலந்து
இன்பம் பெறவும்-
ஜப்பானுக்கு
ஜயம் உண்டாகவும்-
எல்லோரும் ஒன்றாய்
எண்ணித் தொழுவோம்;
எண்ணங்களாலே
இதயம் இணைவோம்!
நட்புடன்,
கிருஷ்ணன் பாலா
Published in Face Books-Notes on Sunday, 27 March 2011 at 23:23
No comments:
Post a Comment