Monday, April 11, 2011

Pray For Japan

உலகப் பொருளாதாரத்தையே


உருமாற்றிய தேசம்;

இன்று-

கலக்கத்தின் கரங்களில்
கரைந்து நிற்கின்றது!

கடல்கோள் அழிவை
கக்கிடும் அலைகளின்
கொடுமைப் பெயரைக்
குறித்த நாடு;


இன்று-


அதே-


கடல் அரக்கனின்
'சுனாமி’க்கரங்களில்


சிக்கி-

சின்னா பின்னபட்டு
விக்கித்து நிற்கிறது!

விரைவில்
அத் தேசம்


துன்பத்திலிருந்து
விடியலைப் பெறவும்;
அமைதியில் சூழ்ந்து
ஆறுதல் பெறவும்;
இழந்த உயிர்கள்

இறையடி நிழலில்
இரண்டறக் கலந்து
இன்பம் பெறவும்-
ஜப்பானுக்கு
ஜயம் உண்டாகவும்-

எல்லோரும் ஒன்றாய்
எண்ணித் தொழுவோம்;
எண்ணங்களாலே
இதயம் இணைவோம்!

நட்புடன்,
கிருஷ்ணன் பாலா
Published in Face Books-Notes on Sunday, 27 March 2011 at 23:23

No comments: